வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகம், 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை ஆகிய மூன்று இடங்களில் மக்களின் நலன் கருதி துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் அவர்களின் அழைப்பின் பேரில், 25.06.2026 அன்று காலை 9:30 முதல் 11:30 வரை சுமார் இரண்டு மணி நேரம், மக்களின் நலன் கருதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று முக்கிய இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

முதல் ஆய்வு — கோவில்பட்டி அரசு மருத்துவமனை: கோவில்பட்டியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனையை விரிவாகப் பார்வையிட்டார். 413 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் 50 படுக்கைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 25,000 சதுர அடியில் ஐந்து மாடி புதிய வளாகம் அமையவுள்ளதால், விரைவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தன்னிறைவு பெற உள்ளது.

ஆனால் அங்கு பல முக்கிய குறைபாடுகள் உள்ளதை ஆய்வில் கண்டும் கேட்டும் அறிந்தார்: இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை மருத்துவர்கள் நிரந்தரமாக இல்லை; மாற்றுத்திறனாளர் மறுவாழ்வு மையத்தில் வாதநோய், விபத்தில் உறுப்புகள் இயலிழப்பு, தன்னிலை குன்றியவர்கள் (Autism) ஆகியோருக்கான பேச்சு சிகிச்சையாளர், occupational therapist நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்; சிறுநீரகச் சுத்திகரிப்புக்கான 8 கருவிகளில் 7 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன — கூடுதல் டயாலிசிஸ் கருவிகள் தேவை.

இரண்டாவது ஆய்வு — அரசு அலுவலக வளாகம் (வார்டு 21): துணை ஆட்சியர் அலுவலகம், BSNL, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், சிறைச் சாலை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வளாகத்திற்குள் உள்ள சாலைகள் 10 ஆண்டு காலுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளதையும் நேரில் கண்டார்.

மூன்றாவது ஆய்வு — 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை: கோவில்பட்டியைச் சுற்றியுள்ள 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை மிகவும் குறுகலாகவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றியும் உள்ளது. தாரமான சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை நேரில் கேட்டறிந்தார்.

இந்த மூன்று ஆய்வுகளின்போதும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் உடன் இருந்தார். பெறப்பட்ட கோரிக்கைகளை தனித் தனியாகத் தொகுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகிய இரு அமைச்சர்களையும் சந்தித்து விரைவில் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்க உள்ளதாக துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு | சங்கொலி