
தலைமைக் கழக அறிவிப்பு
மொத்தம் 16 செய்திகள்


எனது 83 ஆவது பிறந்தநாள் விழா இரத்து செய்யப்படுகிறது!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வரும் செப்டம்பர் 22-இல் திட்டமிடப்பட்டிருந்த தனது 83-வது பிறந்தநாள் விழாவை முற்றிலும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதே இயக்கத்தின் கடமை என்றும், இனிவரும் காலங்களிலும் தன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம், அன்றைய தினம் தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என்றும் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க »
04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்கு
வைகோவின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் கழகத் தோழர்கள், ஜூலை 10-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்
மறுமலர்ச்சி தி.மு.க. சட்டத் திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்நிலைக் குழுவின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டதுடன், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆகிய புதிய பொறுப்புகளின் அதிகாரங்களும் பணிகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு தொடர்பான பொறுப்புகள் அமைப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க »
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளாக அவைத்தலைவர் சு.சம்பத், செயலாளர் இ.என்.கந்தசாமி, பொருளாளர் பி.திருமூர்த்தி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க »தேசிய மருத்துவர்கள் தினம் - வைகோ வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் பி.சி. ராய் அவர்களின் மருத்துவ மற்றும் சமூகப் பங்களிப்பை நினைவுகூர்ந்து, மருத்துவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளான "Behind the Mask: Who Heals the Healers" என்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளான அரசு ஆணை எண் 354-ஐ அமல்படுத்துதல் மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்
மறுமலர்ச்சி தி.மு.க. முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
மேலும் படிக்க »தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 32 ஆவது பொதுக்குழு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது பொதுக்குழு கூட்டம், 27.06.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை விஜய ஸ்ரீ மகாலில், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க »தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூருக்கு வைகோ வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட மாணிக்கம் தாகூருக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பும் தலைமையும் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் படிக்க »தலைமைக் கழக அறிவிப்பு - மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக்குழு கூட்டம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் 'தாயகம்' அலுவலகத்தில் நடைபெறும். கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் குறித்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் படிக்க »மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்! பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரது அரசியல் முயற்சிகள் வெற்றி பெறவும், தமிழ்நாட்டின் மேன்மைக்காக நல்லாட்சி தொடரவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் வாழ்த்தினார். முதல்வர் விஜய் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க »

