வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கழகத்தின் 32வது பொதுக்குழுவில் அனைத்து தகுதியான நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் 12.06.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான அண்ணா அறிவகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜீனராஜ் அவர்கள் தலைமையில் கழக பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அக்கூட்டடதில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பூங்கொடி சா.செந்தில்நாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.சேதுபாஸ்கரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சோ.வீரக்குமாரன் மற்றும் ஈரோடு மாநகர் தெற்கு, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழக வெளியீட்டு அணி துணைச் செயலாளர் பெ.முத்துமாணிக்கம் அவர்களது இளையமகன் மருத்துவர் மு.கெளசிகன், கழக முன்னாள் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.என்.சின்னத்தம்பி, சென்னிமலை பேரூர் கழக முன்னாள் செயலாளர் சோடாக்கடை முத்துசாமி, கழகத் தொண்டரணி தோழர் ம.லோகநாதன் அவர்களின் தந்தையார் மணி, மாவட்ட இலக்கியணி புரவலர் அக்ரகாரம் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நடைபெற உள்ள கழகத்தின் 32வது பொதுக்குழுவில் தகுதியான கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் | சங்கொலி