வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

இந்திய விமான நிலைய ஆணையத் தலைவரை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்கவும், பாதிக்கப்படும் கிராம மக்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கவும் வலியுறுத்தினார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய (Airports Authority of India) தலைவரை (Chairman, AAI) 27.05.2026 அவரது அலுவலகத்தில் சந்தித்து துரை வைகோ எம்.பி., உரையாடினர்.

அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, தற்போதைய 2,423 மீட்டர் (7,949 அடி) நீளமுள்ள ஓடுதளத்தை 3,810 மீட்டர் (12,500 அடி) வரை நீட்டிக்கும் திட்டத்தின் அவசியத்தையும் அவசரத் தேவையையும் ஆணையத் தலைவரின் கவனத்திற்குக்கொண்டு சென்றார்.

மேலும், இந்த ஓடுதள விரிவாக்கத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்கு முன்னுரிமை அளித்து, விரைவில் ஒப்புதல் வழங்கி செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன், ஓடுதள விரிவாக்கப் பகுதிக்கு அருகிலுள்ள கீழக்குறிச்சி, கீழக்குறிச்சி தெற்கு தெரு, நத்தமடிப்பட்டி, முடுக்குப்பட்டி மற்றும் கணேஷ் நகர் ஆகிய கிராமங்களின் மக்கள் பயன்படுத்தும் இணைப்புப் பாதையைப் பாதுகாக்கும் வகையில், அங்கு சுரங்கப்பாதை (Underpass) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஓடுதள விரிவாக்கத்தின் காரணமாக அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இணைப்புச் சாலை மூடப்படாமல், அதற்கு மாற்றாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது கருத்துகளையும் முழுமையாக எடுத்துரைத்தார். துரை வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆணையத் தலைவர், இந்த விவகாரங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விரைவில் பதிலளிப்பதாக உறுதியளித்தார்.

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு | சங்கொலி