வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!

துரை வைகோ எம்.பி., வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தினார்.

வியட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பூ குவாக் (Phu Quoc) தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. இந்த விபத்தில் 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட ஏறத்தாழ 18 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் வெளியாகி வரும் தகவல்கள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றன.

உயிரிழந்தவர்களில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு. பாலாஜி நடேசன், பீமா நகரைச் சேர்ந்த திரு. ஷேக் அப்துல்லா, எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த திரு. அழகுராஜன் சிவசாமி ஆகியோரும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

மேலும், காணாமல் போயிருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் மனதார வேண்டிக்கொள்கிறேன்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் வியட்நாம் அரசின் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைப்பதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்த துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன்.

துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக 11.07.2026

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு: உடல்களை விரைவாக கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்! | சங்கொலி