ஆடுதுறை இரா.முருகன் மீண்டும் கழகத்தில் இணைந்தார்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஆடுதுறை இரா.முருகன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய பி.ஏ.அன்பு மற்றும் இராஜசேகர், பாலு ஆகியோர் 30.06.2026 அன்று சென்னை அண்ணாநகர் இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து கழகத்தில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டார்கள். அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கொளஞ்சி, வெ.ஸ்ரீதரன், எஸ்.ஜெயசீலன், டி.ஜி.சரவணன், காசி சிவவடிவேலு, நெமிலிச்சேரி மு.பாபு, சைதை ப.சுப்பிரமணி, மாவை. மகேந்திரன், விவசாய அணிச் செயலாளர் வாரணவாசி கி.இராஜேந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, தஞ்சை கோ.துரைசிங்கம், விக்டர், இராம.அழகேசன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.






